வதோதரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
204 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பாடிய ரோயல் செலெஞ்சர்ஸ்; பெங்களூரு அணி, அபாரமாக விளையாடி 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதன் மூலம் மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் 2 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது.
முன்னதாக 2024 ஆம் ஆண்டுக்கான தொடரிலும் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments