Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

இஷாரா செவ்வந்தி சற்று முன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்

 


சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும், கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில், முக்கிய சந்தேக நபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட, ஐந்து இலங்கையர்களும் சற்று முன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள், ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 182 ரக விமானத்தின் ஊடாக, காத்மண்டுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று மாலை அழைத்துவரப்பட்டுள்ளனர். 

அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக முன்னதாக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றிருந்தனர். 

நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார். 

சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்றிருந்த நிலையில் நீண்ட நாட்களாக தேடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments